நயன்தாரா குழந்தை பெற்றது தான் திமுகவுக்கு முக்கியம்! விளாசியெடுத்த சிவி சண்முகம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள அசூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான சிவி சண்முகம் கலந்து கொண்டார். மரம் நடும் விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழகத்தில் திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தீவிரவாதம் தலை தூக்கி விடுகிறது. அதற்கு கோவை வெடிகுண்டு விபத்து என்பது இதற்கான முக்கிய எடுத்துக்காட்டு. ஆனால் அதைப் பற்றி சிந்திக்காமல், மக்களிடையே உள்ள அச்சத்தை போக்காமல் இந்த அரசு முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறது. திமுக இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
கோவை வெடி விபத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்காமல் இந்த அரசு நயன்தாரா திருமணத்தில் அதிதீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக நயன்தாரா சட்டத்திற்கு உட்பட்டு திருமணம் செய்து தான் குழந்தை பெற்றாரா என்பதில் தான் கவனம் செலுத்தி வருகிறது” என அவர் திமுகவை விளாசியெடுத்தார்.