அரங்கேறும் புதிய மோசடி!! கல்வி உதவித் தொகை என்ற பெயரில் கவரும் கும்பல்கள்!!

Photo of author

By Gayathri

அரங்கேறும் புதிய மோசடி!! கல்வி உதவித் தொகை என்ற பெயரில் கவரும் கும்பல்கள்!!

Gayathri

New Scam!! Alluring gangs in the name of educational assistance!!

தமிழகத்தில், சமீபகாலமாக பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து புதிய ஆன்லைன் மோசடி முறைகள் பரவி வருகின்றன. இந்த மோசடி முறையில், “கல்வி உதவித்தொகை” என கூறி, பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை திரட்ட முயற்சிக்கும் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இது கடந்த இரண்டு வாரங்களாக பரவி வருகிறது.

மோசடி கும்பல், மாணவர்களின் பெயர், பெற்றோர்களின் பெயர், படிக்கக் கூடிய வகுப்பு என தேவையான அனைத்து விவரங்களையும் கொடுத்து, “ஸ்காலர்ஷிப் வந்துள்ளது” என்று கூறி, அந்த தொகையை பெற்றோரின் வங்கி கணக்கில் பரிசுக்கொடுக்க வேண்டும் என்று வங்கி கணக்கு விவரங்களை கோருகின்றனர். இந்த தகவல் பெற்றோர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் சில பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை காட்டி வங்கி கணக்கு எண் மற்றும் OTP எண்கள் போன்ற தகவல்களை கொடுக்காமல், உடனே காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

அதே நேரத்தில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நேரடியாக வங்கியிலிருந்து வழங்கப்படும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெற்றோர்கள் பெரும்பாலும் இது உண்மையான திட்டம் என்று நம்பி, வங்கி கணக்கு விவரங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், எப்படி இந்த தரவுகள் மோசடி கும்பலுக்கு எவ்வாறு கிடைத்தன என்பது ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த மோசடி முறையை எதிர்கொள்வதற்காக, பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது மட்டுமின்றி, அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.