பணமில்லை மன்னா! புலம்பும் தேமுதிக நிர்வாகிகள்!

பணமில்லை மன்னா! புலம்பும் தேமுதிக நிர்வாகிகள்!

தமிழகத்தில் எதிர் வரும் சட்டசபைத் தேர்தலை தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து சந்திக்க இருக்கிறது. தேமுதிகவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த 60 தொகுதிகளில் விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். ஆகவே அந்தத் தொகுதியில் மட்டும் கூடுதல் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.தேர்தல் நெருங்கி வர இருப்பதால் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் யாவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். … Read more

இறுதி கட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள்

இறுதி கட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய முக்கிய கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.அதேபோல எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி … Read more

பெண்கள் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது! அன்புமணி ராமதாஸ்!

பெண்கள் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது! அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மருத்துவர் ராமதாஸ், உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் … Read more

உதயநிதிக்கு சவால்விட்ட முக்கிய அரசியல் புள்ளி!

உதயநிதிக்கு சவால்விட்ட முக்கிய அரசியல் புள்ளி!

வரும் செவ்வாய்க்கிழமை தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இணைந்த தேமுதிகவின் விஜய பிரபாகரன் உதயநிதி ஸ்டாலின் இடம் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். அதாவது எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை எடுத்துவந்து அதிமுகவிடம் ஒரு அருமையான கேள்வியை எழுப்பிய உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து … Read more

நாளை முதல் ஊரடங்கு உத்தரவு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் ஊரடங்கு உத்தரவு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் செவ்வாய்க்கிழமை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டு மாநிலத்திலும் ஒரே கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வாழ்க்கை எண்ணிக்கையானது மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கி வருகிறார்கள். இதற்கிடையில் திமுகவைச் சார்ந்த ராசாவுக்கு 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.அதோடு தேர்தல் … Read more

பாட்ஷாவாக மாற நினைத்த அண்ணாமலையின் சிறகை ஒடித்த திமுக!

பாட்ஷாவாக மாற நினைத்த அண்ணாமலையின் சிறகை ஒடித்த திமுக!

தற்போது அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் செந்தில் பாலாஜி எதிர்வரும் தேர்தலில் கரூர் தொகுதியில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார். இவர் முன்னரே திமுகவிற்கு மாறிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆகவே அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பாக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் பிரச்சார வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றார். அவர் அவ்வாறு பிரச்சாரம் செய்த சமயத்தில் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசியிருக்கிறார். அது என்னவென்றால் … Read more

வெளியான புதிய கருத்து கணிப்பு! படுகுஷியில் எடப்பாடியார்!

வெளியான புதிய கருத்து கணிப்பு! படுகுஷியில் எடப்பாடியார்!

சட்டசபை தேர்தலில் எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என புதுயுகம் தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி அதனை வெளியிட்டு இருக்கிறது. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 நபர்கள் என்று அடிப்படையில் 2900 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதில் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 46.5 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. திமுக கூட்டணிக்கு இந்தப்பகுதியில் 38.5 சதவீத … Read more

அமித்ஷா செயலால் நெகிழ்ந்துபோன பாஜக தொண்டர்!

அமித்ஷா செயலால் நெகிழ்ந்துபோன பாஜக தொண்டர்!

தமிழகத்தில் இந்த தேர்தலில் எப்படியாவது கால் பதித்து விட வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது அதற்கான வேலைகளையும் அந்த கட்சி செய்ய தொடங்கி இருக்கிறது.அதன்படி தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை தேசிய தலைவர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அதோடு தமிழக மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல சுவாரஸ்யமான விஷயங்களையும் தேசிய தலைவர்கள் செய்து வருகிறார்கள்.அதன்படி நேற்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி … Read more

தமிழில் பேசி மதுரையை அதிர வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

தமிழில் பேசி மதுரையை அதிர வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்றையதினம் மதுரைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கே வழிபாடு நடத்தி இருக்கிறார்.தேர்தல் நெருங்கிவிட்டபடியால் தேசிய தலைவர்களின் பார்வை தற்சமயம் தமிழகத்தின் மீது பட தொடங்கியிருக்கிறது.அந்த வகையில், சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கிறார். நேற்று மதுரையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் இன்று மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது … Read more

சபரீசனை தொடர்ந்து திமுகவின் வியூகத்திலும் கை வைத்த வருமானவரித்துறை!

சபரீசனை தொடர்ந்து திமுகவின் வியூகத்திலும் கை வைத்த வருமானவரித்துறை!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட திலிருந்து தமிழகம் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது அதுவரையில் ஆளும் கட்சியான அதிமுக வசமிருந்த அரசாங்கம் தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பின்னர் அதிகாரிகள் வசம் சென்று விட்டது.இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் போன்றவர்களை வைத்து தமிழகம் முழுவதிலும் பல அதிரடி சோதனைகளை மேற்கொண்டது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட … Read more