நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

தமிழக சட்டசபைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் கட்சி நாள்தோறும் தமிழக மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாளை தமிழக சட்டசபையில் அதிமுக அரசு தன்னுடைய கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றது. ஆளுநர் உரையுடன் இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டம் ஆரம்பித்த நிலையில், விவசாயிகள் கடன் தகுதி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை … Read more

கவிழ்ந்தது புதுச்சேரி அரசு! எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

கவிழ்ந்தது புதுச்சேரி அரசு! எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் நடைபெற்று வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இன்றைய தினம் நாராயணசாமி புதுச்சேரி சட்டசபையில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். ஆகவே இன்று காலை 10 மணி அளவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவில்லை ஆகவே அந்த மாநிலத்தின் சபாநாயகர் சிவக்கொழுந்து … Read more

பொறுத்தது போதும்! பொங்கி எழுந்த டிடிவி தினகரன்!

பொறுத்தது போதும்! பொங்கி எழுந்த டிடிவி தினகரன்!

இதுவரையில் அமைதியாக இருந்து வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது அவசர அவசரமாக பொதுக்குழுவை கூட்டி இருக்கின்றார். ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை அடைந்து பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அவருக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதோடு சசிகலா சென்ற இரு வார காலமாக எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் மௌனமாகவே இருந்து வருகின்றார். இருந்தாலும் தினகரன் விவேக் மற்றும் வழக்கறிஞர்களுடன் மட்டுமே … Read more

திமுக கூட்டணியில் வெடித்தது சர்ச்சை! கூட்டணியில் பிளவை ஏற்படுத்திய முக்கிய கட்சி!

திமுக கூட்டணியில் வெடித்தது சர்ச்சை! கூட்டணியில் பிளவை ஏற்படுத்திய முக்கிய கட்சி!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடத்தப்பட்ட மாநாடு காரணமாக திமுக கூட்டணியில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மிகப்பெரிய மாநாடு நடத்துவது கடினம். ஆனாலும் இவ்வளவு செலவுகளை செய்து மாநாடு நடத்தியதற்கு காரணம் என்ன என்று விசாரணை செய்தபோது தங்களுடைய பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு ஒரு மாநாடு நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழகத்திற்கு தேர்தல் நெருங்கிவரும் சமயம் என்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு … Read more

பெட்ரோல் டீசல் விலை மாநில அரசு அதிரடி அறிவிப்பு! வாய்பிளந்த அண்டை மாநிலங்கள்!

பெட்ரோல் டீசல் விலை மாநில அரசு அதிரடி அறிவிப்பு! வாய்பிளந்த அண்டை மாநிலங்கள்!

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை மட்டும் கிடையாது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் ஒரு பேராபத்தாக கொரோனா இருந்துவருகிறது. ஆனால் தற்சமயம் இந்தியாவை கொரோனாவை கடந்து அச்சுறுத்தும் ஒரு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை கடந்திருக்கிறது. இதன்காரணமாக, எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். சென்ற 12 தினங்களில் மட்டுமே பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 3.63 மற்றும் டீசல் … Read more

ஆரம்பமானது கிளைமேக்ஸ்! அதிகாரத்தை கையில் எடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

ஆரம்பமானது கிளைமேக்ஸ்! அதிகாரத்தை கையில் எடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

புதுச்சேரியில் சென்ற சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் அரசியல் பரபரப்பு இன்றைய தினம் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 30 சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மூன்று நியமன சட்டசபை உறுப்பினர்கள் என்று இருக்கும் புதுச்சேரி சட்டசபையில், காங்கிரஸ் கட்சி 19 சட்டசபை உறுப்பினர்கள் உடன் ஆட்சியில் அமர்ந்தது. இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒரு சட்டசபை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதையடுத்து ஒரு திமுகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் உள்பட ஆறு நபர்கள் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பு! முக்கிய முடிவை எடுத்த நாராயணசாமி!

நம்பிக்கை வாக்கெடுப்பு! முக்கிய முடிவை எடுத்த நாராயணசாமி!

புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வந்த நிலையில், காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் தனவேல் சென்றவருடம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அண்மையில் அமைச்சர்கள் நமச்சிவாயம்,மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகிய இரண்டு பேரும் தங்களுடைய சட்டசபை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள். இதன் காரணமாக, சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சிக்கு குறைந்து காணப்பட்டது. இப்பொழுது 28 சட்டசபை உறுப்பினர்கள் இருக்கும் புதுச்சேரி … Read more

பலே கில்லாடி சசிகலாவுக்கே ஷாக் கொடுத்த டிடிவி

பலே கில்லாடி சசிகலாவுக்கே ஷாக் கொடுத்த டிடிவி

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சுமார் நான்கு வருட காலமாக தண்டனை பெற்று அனுபவித்து வந்த சசிகலா விடுதலை ஆகி சென்ற எட்டாம் தேதி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த சசிகலா டிநகரில் இருக்கின்ற அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றார். அவர் பெங்களூருவில் இருந்த சமயத்திலேயே கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்து குணமடைந்த காரணத்தால், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்சமயம் முழுமையாக குணமடைந்து இருக்கின்ற காரணத்தால் நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும்கூட … Read more

ராமர் கோவில்! ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்!

ராமர் கோவில்! ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்!

மதுரையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிறையில், அதற்காக எல்லோரிடமும் பொருள் உதவி பெறுவதற்காக ரத யாத்திரையை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். மதுரையில் சுமார் 100 வார்டுகளில் யாத்திரை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் மனு கொடுத்தோம். ஆனால் வைரஸ் தொற்று காரணமாக, வைத்து ஊரடங்கு அமலில் இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழும் என்று … Read more

தமிழக சட்டசபை தேர்தல்! துணை ராணுவ படை வருகை!

தமிழக சட்டசபை தேர்தல்! துணை ராணுவ படை வருகை!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம் என்ற காரணத்தால், இந்த மாத இறுதிக்குள் அரசு திட்டங்கள் எல்லாவற்றையும் செயல்படுத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஆரம்ப புள்ளியாக தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி துணை ராணுவ படை தமிழகம் வரை இருக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் போன்ற ஐந்து மாநில சட்டசபைக்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. … Read more