பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன்!

0
72

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சேர்ந்தவர் நிர்மலாதேவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் சில மாணவிகளிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார் மேலும் இந்த வழக்கில் மதுரை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது கடந்த மாதம் 18 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உதவி பேராசிரியர்கள் முருகன் கருப்பசாமி ஆகியோர் ஆஜராகி ஆனால் நிர்மலா தேவி அதனால் நீதிபதி பரிமளா நிர்மலாதேவி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.


இதனை தொடர்ந்து மதுரை சிபிசிஐடி போலீசார் நிர்மலாதேவி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் ச போலீசார் மதுரை சிறையில் நிர்மலாதேவியை அடைத்தனர்.

இந்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி சார்பில் ஜாமீன் மனு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நேற்று நடந்தது நிர்மலாதேவி தரப்பில் வக்கீல் பசும்பொன் பாண்டியன் ஆஜரானார் மனுவை விசாரித்த நீதிபதி மகாராஜன் வழக்கு விசாரணைக்கு நிர்மலாதேவி தவறாமல் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிட்டு அவருக்கு ஜாமீன் வழங்கினார் மேலும் வழக்கு விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

author avatar
CineDesk