நித்யானந்தாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை?

0
117
நாங்கள் விற்கவும் இல்லை! அவர் வாங்கவும் இல்லை! மறுப்பு தெரிவித்த ஈகுவடார்
நாங்கள் விற்கவும் இல்லை! அவர் வாங்கவும் இல்லை! மறுப்பு தெரிவித்த ஈகுவடார்

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன என்பதை கண்டறிந்து தகவல் கொடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.

அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்தி வெளியானது. இது குறித்து அவர் தனிப்பட்ட kailaasa.org என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அதில் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

இதற்கிடையே திருச்சி நாவலூர் குட்டபட்டு மேலத்தெருவை சேர்ந்த ஜான்சி ராணியின் மகள் சங்கீதா கடந்த 2014-ம் ஆண்டு பிடதியில் மர்மமான முறையில் ஆசிரமத்தில் இறந்தார். இவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் ஜான்சி ராணி குற்றம்சாட்டினார்.

சங்கீதாவின் மர்ம சாவு பற்றிய விசாரணையும் நடைபெற்று வந்த நிலையில் இந்த நிலையில் சங்கீதா சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜான்சிராணி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம், கர்நாடக அரசுக்கு அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தா வெளிநாட்டில் உள்ளார். நித்யானந்தாவை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக நித்யானந்தா மீது சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இண்டர்போல் மூலம் நித்யானந்தாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்படும். அவரை நாடுகடத்தி இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது.

author avatar
CineDesk