எந்த கொம்பனும் திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது!! திருச்சியில் சூளுரைத்த முதல்வர்

0
32

எந்த கொம்பனும் திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது!! திருச்சியில் சூளுரைத்த முதல்வர்!!

முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி சென்றுள்ளார். அங்கே டெல்டா
மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 12,645 வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் முதல்வர் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது,

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக திருச்சியில் நடந்த கூட்டம் அமைந்தது. திமுகவுக்கும் திருச்சிக்கும் எப்போதும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெற்றி ஒன்றிய இலக்கு என செயல்பட வேண்டும்.

அரசின் சாதனை திட்டங்கள் மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் தகுதியான கோரிக்கைகளை அமைச்சர்கள் பரிசீலித்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எங்களுக்குள் குறைகள் இருக்கலாம். ஆனால் திமுக ஆட்சியில் எப்பொழுதும் குறைகளை இருக்காது. எதிரிகள் பரப்பும் அவதூறு கருத்துக்களை பொருட்படுத்தாமல் மக்களுக்குத் திட்டங்களை கொண்டு செல்லுங்கள். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறோம்.

வெறுப்பு அரசியலால் தான் வடமாநிலமான மணிப்பூர் பற்றி எரிகிறது. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி அமைதி காப்பது ஏன்? திமுகவுக்காக ஆளுநர் பிரச்சாரம் செய்து வருகிறார். நரேந்திர மோடி இந்தியா கூட்டணியை பார்த்து பயப்பட தொடங்கி விட்டார். பெரியார் அண்ணா மற்றும் கருணாநிதியின் வாரிசுகள் நாங்கள். மோசமான பாஜகவின் ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்று முதல்வர் தெரிவித்தார்.