வீடியோ வேண்டாம் எச்சரித்த அண்ணன் கேட்க மறுத்த தங்கை!! ஆத்திரத்தில் செய்த விபரீத காரியம்!! 

0
34

வீடியோ வேண்டாம் எச்சரித்த அண்ணன் கேட்க மறுத்த தங்கை!! ஆத்திரத்தில் செய்த விபரீத காரியம்!! 

சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் கேட்காத தங்கையை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

தெலுங்கானாவில் 22 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதான உதவி செவிலியர் படிப்பு படித்த தங்கை ஒருவர் இருக்கிறார். மேலும் இவர் ஒரு மருத்துவமனையில் பயிற்சியாளராக இருக்கிறார்.

அந்தப் பெண் தன்னுடைய விதவிதமான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார். இது அந்த பெண்ணின் சகோதரருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதன் காரணமாக இரண்டு, மூன்று முறை தனது தங்கையை சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

ஆனால் அவரது தங்கையோ தனது அண்ணன் சொல்வதை கேட்காமல் மீண்டும், மீண்டும் வீடியோ பதிவிடுவதை செய்து வந்துள்ளார். இதனால் நேற்று அவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சகோதரன் எச்சரித்தும் அந்தப் பெண் நான் எனது விருப்பப்படி தான் செய்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரன் உலக்கையால் தனது தங்கையின் தலையில் தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அந்தப் பெண்ணை அவரது குடும்ப உறுப்பினர்கள் கம்மத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன் பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக வாரங்கலில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்தப் பெண் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின்னர் அந்தப் பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் கொலையாக வழக்கு பதிவு செய்து அவரது சகோதரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.