நமது நாட்டில் நோய் பட்டியலில் முதலிடம் வகிப்பது சர்க்கரை நோய்தான்.இன்றைய சூழலில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருப்பதுதான் நிதர்சனம்.உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதையே சர்க்கரை நோய் என்கின்றோம்.இந்த சர்க்கரை நோய் பெரும்பாலும் உணவுப் பழக்கத்தாலே ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் அறிகுறிகள்:
1.அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்
2.கண் பார்வை மங்குதல்
3.அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல்
4.திடீர் உடல் எடை குறைவு
5.உடலில் ஏற்படும் காயங்கள் குணமாகாம தாமதமாதல்
6.உடல் சோர்வு
சர்க்கரை நோயை குணப்படுத்தும் பழங்கள்:
1)கொய்யாப்பழம்
ஆன்டி ஆக்ஸிடன்டஸ் அதிகம் நிறைந்து காணப்படும் கொய்யா பழத்தை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.
2)நாவல் பழம்
இந்த பழம் மற்றும் அதன் விதை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
3)நெல்லிக்காய்
வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இந்த காயில் ஜூஸ் செய்து பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
4)ஆப்பிள்
இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.ஆப்பிளில் இருக்கின்ற நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
5)சிட்ரஸ் பழங்கள்
இதில் இருக்கின்ற வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
6)கிவி
அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்களில் கிவியும் ஒன்று.இதை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட கிவி பழத்தை சாப்பிடலாம்.
7)கருப்பு திராட்சை
தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு கட்டுப்படும்.அதேபோல் பேரிக்காய்,பிளம்ஸ்,பீச் போன்ற பழங்களை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.