இனி கடையிலிருக்கும் ஹேர் டை தேவையில்லை!! உங்கள் நரைமுடியை கருப்பாக்க வீட்டிலிருக்கும் இந்த ஒரு இலை போதும்!! 

0
193
No more store-bought hair dye!! This one leaf at home is enough to turn your gray hair black!!
No more store-bought hair dye!! This one leaf at home is enough to turn your gray hair black!!

இனி கடையிலிருக்கும் ஹேர் டை தேவையில்லை!! உங்கள் நரைமுடியை கருப்பாக்க வீட்டிலிருக்கும் இந்த ஒரு இலை போதும்!!

இந்த காலகட்டத்தில் இளம் வயதினருக்கு நரை முடி பிரச்சனை வந்து விடுகிறது. இதற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட கெமிக்கல்களை உபயோகித்து, முடி உதிர்வு பொடுகு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இவற்றிலிருந்து விடுபட நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இயற்கையான முறையில் ஹேர் டை செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
கற்பூரவள்ளி இலை
அவுரி இலை பொடி
நெல்லி பொடி
தேங்காய் எண்ணெய்
தேங்காய் பால்

செய்முறை:
எட்டிலிருந்து ஒன்பது கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.
பின்பு இதனை இடித்தோ அல்லது மிக்ஸியில் அரைத்து இதில் உள்ள சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேறொரு பாத்திரத்தில் கற்பூரவல்லி சாறு இரண்டு டேபிள் ஸ்பூன் மற்றும் தேங்காய் பால் மூன்று டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
மேற்கொண்டு அவுரி இலை ,நெல்லி பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை இரண்டையும் 1 ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது.இறுதியில் 1ஸ்பூன் தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை அப்படியே தலையில் தடவி காய வைத்து குளித்து விட வேண்டும்.ஆயிர கணக்கில் கடைகளில் விற்கும் டையை உபயோகிப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது.இதிலிருந்து வெளியேற இந்த இயற்கை ஹேர் டையை உபயோகிக்கலாம்.