இனி புற்றுநோய் பற்றிய கவலை வேண்டாம்!! கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!!

Photo of author

By Divya

இனி புற்றுநோய் பற்றிய கவலை வேண்டாம்!! கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!!

Divya

உலகின் கொடிய நோயிகளில் புற்றுநோயும் ஒன்று.இந்த புற்றுநோய் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,வாய் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய் என்று புற்றுநோயில் ஏராளமான வகைகள் உள்ளன.புற்றுநோய் புதிய நோய் இல்லையென்றாலும் அதை முழுமையாக குணப்படுத்தும் அதிகாரப்பூர்வ மருந்து ஊசி இல்லாத நிலைதான் நீடித்தது.

ஆனால் தற்பொழுது புற்றுநோய்க்கு பல மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்றுதான் கார்-டி-செல் சிகிச்சை.இது புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட உதவுகிறது.இந்த கார்-டி-செல்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது.

இந்த டி செல்கள் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் ஆய்வின் மூலம் மாற்றப்படுகிறது.இந்த கார்-டி-செல்கள் இரத்தப்புற்று நோய் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.இந்த கார் டி செல் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது.

இந்த கார்-டி-செல் சிகிச்சை கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகாரம் செய்யப்பட்டது.இந்த கார்-டி-செல் சிகிச்சை புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதால் இதை மருத்துவத் துறையில் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும் கார்-டி-செல் சிகிச்சை பற்றிய பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.கார்-டி-செல் சிகிச்சையால் சிலருக்கு மூச்சுத் திணறல்,குறை இரத்த அழுத்தம்,இதய நோய்,காய்ச்சல்,நுரையீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.அதேபோல் குழப்பம்,நடுக்கம்,பேசுவதில் சிரமம்,சுய நினைவு இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.