பொங்கல் பரிசில் ரூ.1000 இல்லை!! உண்மையை உடைத்து அமைச்சர் அன்பரசன்!!

Photo of author

By Gayathri

2025 பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகையை மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வரும் நிலையில், பொங்கல் பரிசு தொகை கிடைப்பது சந்தேகம் என வெளியாகி இருக்கும் தகவல் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பரசன் தெரிவித்திருப்பதாவது :-

அரசு கஜானாவில் பணம் இல்லை. அதனால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பணத்தை தயார் செய்து கொண்டிருக்கிறார். சீக்கிரமே எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மகளிர் உரிமை தொகை வழங்குவது சிக்கலானதாக இவர் தெரிவித்திருக்கும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் தொகையை மட்டும் எப்படி அவர்களால் கொடுக்க முடியும் என்ற கேள்வி மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

பொங்கல் பரிசு தொகப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை என்றால் ஆட்சியில் உள்ள அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி வந்துவிடும் என்ற காரணத்தால் இதில் எந்தவித தடையும் ஏற்படாது என்றும் இதற்கான நிதி திரட்டலில் அனைத்து துறைகளும் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

போதுமான தொகை அரசு கஜானாவுக்கு வந்தவுடன் உடனடியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். இப்போதைய சூழலில் தமிழ்நாடு கடும் அரசு நிதி நெருக்கடியிலேயே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் சமூக நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த முடியாத சூழல் கூட உருவாகவும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.