வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!!

0
37
#image_title

வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!!

தற்பொழுது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வேதியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இரஷ்யாவை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

கடந்த அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்றது. முதல் நாளில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதே போல இரண்டாம் நாளான நேற்று(அக்டோபர்4) இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்துஒ மூன்றாவது நாளான இன்று(அக்டோபர் 4) வேதியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகளுக்கும், இரஷ்யாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானிக்கும் ஆக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் ஆகியிருக்கும் இரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸி ஈகிமோவ் அவர்களுக்கும் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

நோபல் பரிசு பெறும் ஒவ்வொரு நபர்களுக்கும் நோபல் விருதுடன் சேர்த்து 8 கோடி ரூபாய்க்கான ரெக்கார்ட் பரிசும் வழங்கப்படவுள்ளது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் டிசம்பர் மாதம் 10ம் தேதி நோபல் விருதுகள் வழங்கப்படவுள்ளது.