ஹெல்மெட் அணியவில்லையா?? அப்போ இனிமேல் இது கட்டாயம்!! வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு!! 

0
47
not-wearing-a-helmet-so-henceforth-this-is-mandatory-new-control-for-motorists
not-wearing-a-helmet-so-henceforth-this-is-mandatory-new-control-for-motorists

ஹெல்மெட் அணியவில்லையா?? அப்போ இனிமேல் இது கட்டாயம்!! வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு!! 

இனிமேல் ஹெல்மெட் அணியாக வாகன ஓட்டிகளுக்கு புதிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டியிடம் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் கடுமையான முறையில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அபராதத்தை வாங்கும் விதிமுறைகளில் கடுமை காட்டுவதை விட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நேற்று விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டது. இதைப்போலவே 31-ந்தேதி வரையில் மெரினா உழைப்பாளர் சிலை சந்திப்பு, மயிலாப்பூர் லஸ் சந்திப்பு, நந்தனம் சிக்னல் சந்திப்பு, சென்டிரல் லைட் பாயிண்ட் சந்திப்பு, அண்ணா நகர் ரவுண்டானா சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரமானது நடைபெற உள்ளது.

சாலை பாதுகாப்பு விதிகளை பற்றி நன்கு பயிற்சி பெற்ற மாணவ மாணவியர் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் தொடக்க விழா, சென்னை வேப்பேரி ஈ.வெ.ரா. சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பில் நேற்று காலை நடைபெற்றது. இதில், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு இந்த  பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது. இனிமேல் ஹெல்மெட் அணிவேன் என்ற உறுதிமொழி பத்திரமும் அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது. பின்னால் அமர்ந்து வந்த பெண்களுக்கும் இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.

மேலும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி ஷரத்கர், இணை கமிஷனர் மயில் வாகனன், உதவி கமிஷனர் கிறிஸ்டோபர், இன்ஸ்பெக்டர்கள் பாண்டிவேலு, டேனியல் ராஜ் உள்ளிட்டோரும், போக்குவரத்து போலீஸ் வார்டன்களும் கலந்துகொண்டனர்.