துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் அதிமுகவினர்! வெளியானது முக்கிய தகவல்

திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் இன்று காலை சேர்க்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்துள்ள நிலையில் அவர் முழு உடல் பரிசோதனைக்காக தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் அதிமுகவினர்! வெளியானது முக்கிய தகவல்
640

இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை சூளைமேடு பகுதியில் இருக்கும் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இன்று மதியம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதனால் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு என்ன ஆனது என பல்வேறு விதமான கேள்விகள் எழுந்தன.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் அதிமுகவினர்! வெளியானது முக்கிய தகவல்

இந்த நிலையில் துணை முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் ஓபிஎஸ் உடல்நலம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.

அதில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம முழு உடல் பரிசோதனை செய்யவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவரை மருத்துவர்கள் குழு பரிசோதனை வருவதாகவும், அவர் நலமாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment