இயற்கை இனிப்பு சுவை கொண்ட கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் நம் ஊரில் பிரபலமான ஒரு பானமாக உள்ளது.கரும்பை பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு,ஐஸ்கட்டி சேர்த்து குடித்தால் கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு நன்றாக இருக்கும்.
தினமும் ஒரு கிளாஸ் கரும்பு சாறு குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.கரும்பு ஜூஸில் இரும்பு,மெக்னீசியம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.
கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் நீரிழிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கரும்பில் இருக்கின்ற கால்சியம் சத்து உடலை வலுவாக்க உதவுகிறது.
கரும்பு ஜூஸ் குடிப்பதால் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.என்றும் இளமையாக இருக்க கரும்பு ஜூஸ் செய்து குடிக்கலாம்.கரும்பு ஜூஸில் இருக்கின்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
கரும்பு ஜூஸ் குடித்தால் சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.கரும்பு ஜூஸில் எலுமிச்சை சாறு,தேங்காய் தண்ணீர் கலந்து குடித்தால் உடலில் இருக்கின்ற தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.
கரும்பு ஜூஸ் குடித்தால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட,செரிமானப் பிரச்சனை சரியாக கரும்பு ஜூஸ் செய்து குடிக்கலாம்.கரும்பு சாறு தொண்டை எரிச்சல்,தொண்டைப்புண் ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது.
உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய கரும்பு ஜூஸ் செய்து குடிக்கலாம்.கரும்பு ஜூஸ் செய்து குடித்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.