பழமை விரும்பிகளா நீங்கள்!அப்போது இதை படியுங்கள்?

பழமையை மீட்டெடுக்கும் விதமாகவும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் சென்னை ரயில்வே சார்பில் முக்கிய விழா நாட்களில் பழமையான நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பழமையான நீராவி எஞ்சின் ரயில் நாளை சனிக்கிழமை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் இயக்கப்பட உள்ளது.

காலை 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் மருமார்கமாக மதியம் 12 45 மணிக்கு கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் நீராவி எஞ்சின் ஒரு பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். அதில் 40 பேர் பயணம் செய்யலாம்.


எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் செல்ல ரூ 500 கட்டணமும் உணவுக்கு கூடுதலாக 165 ரூபாய் ஆகும் நினைவு பொருளுக்கு 100 மொத்தம் 765 கட்டணம் வசூலிக்கப்படுகிறது மறு மார்க்கமாக கோடம்பாக்கத்தில் இருந்து எழும்பூர் செல்ல கூடுதலாக கட்டணம் ஆகியோருடன் மொத்தம் 1265 வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் போல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 300 கட்டணத்துடன் உணவு நினைவு பொருளுடன் சேர்த்து 565 மருமார்கத்திலிருந்து பயணம் செய்ய கூடுதலாக 300 கட்டணத்துடன் மொத்தம் 865 கட்டணமும் வசூலிக்கப்படும் வெளிநாட்டை சேர்ந்த பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு 1765 ரூபாய் கட்டணமாகும்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டிக்கட் கவுண்டரில் இந்த ரயில் பயணத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது மொத்தம் 80 டிக்கெட்டுகள் வரை மட்டும் விற்பனை செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Comment