இந்திய-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்னை வருகை!

0
229

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 10 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் 20 20 தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் லோகேஷ் ராகுல் 91ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 71 ரன்களும் கேப்டன் கோலி அவுட்டாகாமல் 21 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி நிர்ணயித்த 20 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்தது 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்ககளே எடுக்க முடிந்தது இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.


இதனிடையே இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டி சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்னை வருகை!

இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். இங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் அவர்கள் தங்கியுள்ளனர் இன்று காலை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சியைத் தொடங்கினர். மாலையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

Previous articleஜார்கண்ட் தேர்தல்…. வாக்களித்த தோனி!
Next articleபழமை விரும்பிகளா நீங்கள்!அப்போது இதை படியுங்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here