வீடு மற்றும் கடை வாடகையை சரியாக கொடுக்கின்ற நபர்கள் வாடகைக்கு வர இதை மட்டும் செய்யுங்கள்!!

0
96
#image_title

வீடு மற்றும் கடை வாடகையை சரியாக கொடுக்கின்ற நபர்கள் வாடகைக்கு வர இதை மட்டும் செய்யுங்கள்!!

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வீடு மற்றும் கடையை வாடகைக்கு விட்டு சைடு இன்கம் பார்த்து வருகின்றனர். நாம் குடி வைக்கும் நபர்களை பொறுத்து தான் நம் வீட்டிற்கான வாடகை மாதம் தோறும் தவறாமல் நம் கைக்கு வந்து சேரும். அப்படி முறையாக வீடு மற்றும் கடை வாடகை கொடுக்க கூடிய ஆட்கள் வாடகைக்கு வர வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும்.

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:-

*பன்னீர்

*கல் உப்பு

*மஞ்சள் தூள்

*பச்சைக் கற்பூரம்

*வெண்கடுகு

*மருதாணி விதை

*வெள்ளைக் குங்குலியம்

*நல்லெணெய்

*திரி

*பச்சை பட்டு துணி

*வெட்டி வேர்

*எலுமிச்சம் பழம்

*துளசி பவுடர்

பரிகாரம் செய்யும் முறை…

வியாழக்கிழமை அன்று எந்த வீடு / கடை வாடகைக்கு விட விட வேண்டுமோ அங்கு சென்று தண்ணீரில் சிறிது பன்னீர், கல் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பச்சைக் கற்பூரம் கலந்து கழுவி விடவும்.

பின்பு வெள்ளிக் கிழமை அன்று அங்கு கப் சாம்பிராணியை 3 ஏற்றி சிறிது வெண்கடுகு, மருதாணி விதை, வெள்ளைக் குங்குலியம் தூள் அனைத்தையும் அதன் மீது தூவி அங்குள்ள அனைத்து மூலிகைகளிலும் புகை காட்டவும்.

பின்பு ஒரு பஞ்ச கவ்ய விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி 2 திரி போட்டு தீபம் ஏற்றி தென் மேற்கு மூலையில் வைத்து எரிய விடவும். அது எரிந்து முடியும் வரை அங்கு தான் இருக்க வேண்டும்.

பிறகு ஒரு அடிக்கு ஒரு அடி பச்சைத் துணியில் ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேர், ஒரு புள்ளி இல்லாத எலுமிச்சை, 3 தேக்கரண்டி துளசி பவுடர் அனைத்தையும் வைத்து முடிச்சுப் போட்டு அங்கு எதாவது ஒரு ஷெல்ஃபில் வைத்து விடவும்.

24 மணி நேரமும் அங்கு ஒரு சிறிய பல்ப் எரிய விடவும். இரண்டாவது வெள்ளிக் கிழமை அங்கு சென்று இதே போல் விளக்கு ஏற்றி தூபம் போடவும். அதற்குள் நிச்சயம் வாடகைக்கு ஆட்கள் வந்து விடுவர்.

சாவியை அவர்கள் கைக்குக் கொடுக்கும் முன்னர் அந்த முடிச்சியைக் கால் படாத இடத்தில் போடவும்.