மத்திய பாஜக அரசு தமிழுக்கும், பிற செம்மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி மற்றும் தமிழுக்கு குறைந்த நிதி வழங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் RTI (தகவல் அறியும் உரிமை) மூலம் வெளியான தகவல், தற்போது பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
RTI மூலம் வெளியான புள்ளி விவரம்:
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தனது “X” சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, 2014-15 முதல் 2024-25 வரை:
சமஸ்கிருத மொழிக்கு மட்டும் மத்திய அரசு செலவிட்டது: ₹2,532.59 கோடி
அதே காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 செம்மொழிகளுக்கு சேர்த்து செலவிட்டது: ₹147.56 கோடி
அதாவது:
சமஸ்கிருதுக்கு வருடத்திற்கு சராசரியாக ₹230 கோடி
5 செம்மொழிகளுக்கெல்லாம் சேர்ந்தே வருடத்திற்கு ₹13.41 கோடி மட்டுமே!
“தமிழுக்கு வாய்ப்புகள் அல்ல, வெறும் வாக்குகள்!” – சு.வெங்கடேசன்
சமஸ்கிருதம் பேசும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தும், அந்த மொழிக்காக 2,500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதை சுட்டி காட்டிய சு.வெங்கடேசன், கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்:
“தமிழ், தமிழர்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு வாக்கு மட்டும்! நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கே!”
தமிழ், தெலுங்கு, கன்னடம் – வெறும் சதவீதங்கள் தான்!
புள்ளிவிவரங்களை பொருத்தவரை:
உருது: ₹837.94 கோடி
ஹிந்தி: ₹426.99 கோடி
சிந்தி: ₹53.03 கோடி
தமிழ்: ₹113.48 கோடி (GPIL மூலமாக முந்தைய ஆண்டுகளில்)
கன்னடம், தெலுங்கு: முறையே 0.5% மற்றும் 0.2% மட்டுமே!
முக்கிய தகவல்:
2004ல் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ், இலக்கிய, வரலாற்று முக்கியத்துவம் கொண்டது என்பதால் அதிக நிதி கிடைக்க வேண்டியிருந்தாலும், மத்திய அரசின் உள்நோக்கங்கள் காரணமாக குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆதரவை பெற்ற மொழிகள்… மறுப்பு!
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி:
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் – மொத்த இந்திய மக்கள்தொகையில் 22% பேர் பேசும் மொழிகள். ஆனால், இவற்றுக்கான மத்திய நிதி பங்களிப்பு, சமஸ்கிருதத்தின் நிழலும் எட்டவில்லை!
“பாஜகவின் சமஸ்கிருத மேலாதிக்க வெறி” – அரசியல் விமர்சனம்
மொழி சார்ந்த மதிப்பீட்டில் தமிழுக்கு மட்டும் அல்லாமல் மற்ற செம்மொழிகளுக்கும் புறக்கணிப்பு நிலை மத்திய அரசின் திட்டமிட்ட அரசியல் நோக்கத்தையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.இந்த விவகாரத்திற்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. வருகிற நாட்களில் இது மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.