திமுக அரசின் மீது எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு! இதனை உடனடியாக கைவிட வேண்டும்!
நேற்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை அரசியலின் காரணமாக முடக்கி மக்களை தேடி மருத்துவம் என்று ஒரு பயனும் இல்லாத திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது அந்த திட்டத்தில் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா என்பது மக்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் போலியாக விளம்பரத்துக்காக மக்களை தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு மருத்துவத்தை தேடி மக்களை அலைய வைக்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுயிருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் மக்களை தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு மருத்துவத்தை மக்களை திமுக அரசு அடைய வைப்பதை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டி இந்த அறிக்கையை வெளியிட்டார்.