தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்! இன்று மற்றும் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்தது.அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இந்நிலையில் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவ வாய்புள்ளது.மேலும் இன்று தென் தமிழக மாவட்டங்களில் பல இடங்களிலும்,வடதமிழக மாவட்டங்களாகிய புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது.பிப்ரவரி ஐந்தாம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் அதனால் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.