மருத்துவர் ராமதாசை துயரத்தில் ஆழ்த்திய மரணம்!

Photo of author

By Sakthi

மருத்துவர் ராமதாசை துயரத்தில் ஆழ்த்திய மரணம்!

Sakthi

டெல்டா நாராயணசாமி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு வெளியிட்டுயிருக்கின்ற இரங்கல் செய்தியில் என்னுடைய அரசியல் மற்றும் சமூக நீதி பயணத்தில் மறக்க இயலாத மனிதர் டெல்டா நாராயணசாமி தான் என்னுடைய வாழ்க்கையின் அனைத்து வெற்றி மற்றும் சோகங்கள் , சுகதுக்கங்கள் போன்றவற்றில் எனக்கு துணையாக இருந்தவர். என்னைப்போலவே எளிய குடும்பத்தில் பிறந்து கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் பொறியாளராக உருவெடுத்தவர். கடுமையான உழைப்பு காரணமாக, தொழில் அதிபராக உயர்ந்தார். 40 வருடங்களுக்கு முன்பு சமூக நற்பணி மன்றத்தில் எங்களுடைய நட்பு ஆரம்பமானது. வன்னியர் சங்க காலத்தில் வளர்ந்தது. அதன்பிறகு அசைக்க இயலாத ஆலமரமாக விழுது விட்டது. தூய நட்புக்கு சொந்தக்காரரான நாராயணசாமி மறைவு செய்தி கேட்டு என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. கண்கள் குளமாகின்றன என தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

ஆனால் அதோடு மேலும் அவர் தெரிவித்ததாவது என் மீதும், சமுதாயத்தின் மீதும், மிகப்பெரிய பற்றுக் கொண்டவர் எனவும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டங்களின் போதும் தளபதியாக விளங்கியவர் என்றும், இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் சொந்தங்கள் 21 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை ஆனதை தொடர்ந்து, அவர்களுடைய குடும்பத்திற்கு நிதி வாங்கி கொடுக்கும் குழுவின் உறுப்பினராக மிகவும் சிறப்பாக செயலாற்றி வந்தவர் நாராயணசாமி என்று தெரிவித்திருக்கிறார்.

1989 ஆம் வருடத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் உரையாடுவதற்கு சென்னையில் இருக்கும் டெல்டா நாராயணசாமியின் வீட்டில் இருந்து தான் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னை அழைத்துச் சென்றார். அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட தினப்புரட்சி நாளிழலின் மேலாண் இயக்குனராக பணியாற்றினார். இந்த நிகழ்வுகளை நினைவு கூறும்போதெல்லாம் எங்களுடைய நட்பின் ஆழத்தையும், வலிமையையும், உணர இயலும் என்று தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவராக டெல்டா நாராயணசாமி இருந்திருந்தார். சென்னைக்கு நான் வருகை தரும் போதெல்லாம் அவரை சந்திக்காமல் சென்றது கிடையாது. அவருடைய மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும் எங்களுடைய சமூகத்துக்கும் பேரிழப்பு என தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த துயர சம்பவத்தில் இருந்து என்னை நானே தேற்றிக் கொள்ள இயலாமல் இருந்தாலும் நாராயணசாமியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.