இறந்தவர்களின் உடலில் கொரோனா எத்தனை மணி நேரம் இருக்கும்? எய்ம்ஸ் தடய அறிவியலர் விளக்கம்!

0
59

நாளுக்கு நாள் கொரோனா வின் தாக்கம் உலகையே தாக்கி ஸ்தம்பித்து வருகிறது. போன அலையை விட இந்த அலையில் இந்திய நாடு மிகவும் அதிகம் பாதித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் ஊரடங்கு போடப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு தளர்வு குளம் கொடுக்கப்பட்டிருந்தன. இறுதி சடங்கிற்கு 10 பேர் மட்டுமே அனுமதி போன்ற தளர்வுகளும் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி இறந்த உடலிலிருந்து கொரோனா எப்படி பரவும்? எத்தனை மணி நேரம் இருக்கும் என்பதை பற்றியே.

 

பொதுவாக இறந்தவர்களின் உடலில் 24 மணி நேரம் மட்டுமே இருக்குமாம். எரித்த சாம்பல் மூலம் எந்த ஒரு தொற்று பரவாது என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் தடய அறிவியல் துறையின் தலைவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் கடந்த ஒரு வருடமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை பரிசோதித்த பொழுதும் கொரோனா இறந்தவர்களின் தொண்டை மற்றும் மூக்கில் 12 மற்றும் 24 மணி நேரம் வரை வைரஸ் உயிருடன் இருக்கலாம் அதற்கு மேல் தொற்று உயிருடன் இருக்காது என்று தெரிவித்தார்.

 

கொரோனாவால் உயிரிழந்த ஒருவரிடன் உடலில் இருந்து வேறுஒருவரின் உடலுக்கு தொற்று பரவ வாய்ப்பில்லை என தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் கொரோனா நோயாளிகளை முழுவதுமாக எரித்து பிறகு அந்த சாம்பலில் இருந்தும் தொற்று பரவாது. என்று கூறியுள்ளார்.

author avatar
Kowsalya