அது வேற வாய் இது வேற வாயா? முதல்வரை வெளுத்து வாங்கிய எச் ராஜா!

Photo of author

By Sakthi

அது வேற வாய் இது வேற வாயா? முதல்வரை வெளுத்து வாங்கிய எச் ராஜா!

Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்திருக்கின்றன 27 மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி நேற்றையதினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது. காரைக்குடியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹஜ் ராஜா முதலமைச்சர் கல்லா கட்டுவதற்காக மதுபான கடைகளை திறந்திருக்கிறார் என்று கோஷம் போட்டார் ஸ்டாலின். அது வேற வாய் இது வேற வாயா நோய்தொற்று 29 மடங்கு அதிகரித்து இருக்கும் சமயத்தில் மதுபான கடைகளை எவ்வாறு திறந்து வைக்கலாம் என்று கடுமையாக சாடியிருக்கிறார் எச் ராஜா.

மதுபான கடைகளை திறந்து வைத்திருப்பதை பாரதிய ஜனதா கட்சி மிகக்கடுமையாக கண்டிக்கின்றது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் கொள்ளை நடக்கும் என்று தெரிவித்தும் பொதுமக்கள் யாரும் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதனை தற்சமயம் அனுபவித்து வருகிறார்கள் ஓட்டு போட்ட மக்கள் எதற்காக வாக்களித்தோம் என்று நினைக்கும் அளவிற்கு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. வெறும் அரைவேக்காடு அமைச்சர்கள் ஆகி பொதுமக்களை படுத்தும் பாடு தாங்க இயலவில்லை என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார் எச் ராஜா. அவருடைய இந்த விமர்சனத்திற்கு திராவிடர் முன்னேற்ற கழகத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ராஜாவின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ராஜா பிரச்சாரம் செய்து மதுக்கடைகளை மூட செய்ய வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். மதுக்கடைகள் இல்லாவிட்டால் கள்ளச்சாராயம் அதிகமாகிவிடும் இதனை யாரும் மறுத்துவிட இயலாது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.