பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

0
37
Parents beware boys are also at risk!! Tragedy happened to the child who went there because he said he would buy ice cream!!
Parents beware boys are also at risk!! Tragedy happened to the child who went there because he said he would buy ice cream!!

பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

விளையாட சென்ற குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறி உறவினர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக உள்ளார்.. இவருடைய மகன் மதியரசு வயது 6. இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறுவன் விளையாட சென்றுள்ளான் . ஆனால் மீண்டும்  அவன் வீடு திரும்பவில்லை.

இதனால் கடும் அதிர்ச்சியுற்ற பெற்றோர் அந்த சிறுவனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என அனைத்து பகுதிகளிலும் தேடி உள்ளனர். ஆனால் எங்கும் அந்த சிறுவன் இல்லை. இ எனவே மிகுந்த கலக்கமுற்ற பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

இந்த சூழ்நிலையில்  பயன்பாடு இல்லாத ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டியில் மதியரசு பிணமாக கிடப்பது நேற்று தெரிய வந்தது. இதனால் தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வை இட்டதில் சிறுவனின் கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதினர்.

போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தன.

அதில் உறவினர் ஒருவர் சிறுவனை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. சிறுவனின் உறவினரான 18 வயதான பிரகாஷ் இந்த கொலை வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். செல்போன் தராததால் முதலில் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் கூறிய நிலையில் திடீர் திருப்பமாக பாலியல் தொல்லை தந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்து தொட்டியில் வீசி சென்றுள்ளார். ஆனால் சிறுவனை ஒருவர் மற்றும் கொலை செய்ய வாய்ப்புகள் இல்லை., கூட்டாகத் தான் கொலை செய்திருப்பார் என சிறுவனின் உறவினர்கள் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.