மக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!

0
102

மக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!

இன்றைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு உயிர் கொல்லி நோய் தான் புற்றுநோய். புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை எளிதில் குணப்படுத்த முடியும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பெற்றிருப்பது அவசியம்.

நமது உடல் உண்டாகக் கூடிய ஒரு செல் அதிவேகமாக வளரக்கூடியதும் அதேசமயம் பரவக்கூடியதுமான இருக்கிறது என்றால் அது புற்றுநோய். ரத்தத்தில் ஒரு செல் அதிகமாக வளர்ச்சி அடைந்தால் அது ரத்த புற்றுநோய். இதேபோல் உடலின் உள்ளுறுப்புகளில் எந்த பகுதியில் செல்கள் வளர்ச்சி அடைந்து பரவுகிறதோ அந்தந்த உறுப்புகளுக்கு தகுந்தாற்போல் புற்றுநோய் வரையறுக்கப்படுகிறது.

அடுத்து புற்றுநோயின் அறிகுறிகள் பார்ப்போம். புற்றுநோய் வகைகளிலேயே மிகவும் கொடிய நோய் எனக் கூறப்படுவது ரத்த புற்றுநோய் அதன் அறிகுறிகளை பார்ப்போம். உடலில் உள்ள ரத்த செல்களின் வளர்ச்சி முரண்பாடு அடையும் பொழுது தான் ரத்த புற்றுநோய் அதாவது லுகேமியா உருவாகிறது.
1. ஒருவருக்கு ரத்த புற்று நோய் இருந்தால் அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் மாத கணக்கில் காய்ச்சல் விட்டு விட்டு வருவது, ரத்த சோகை இதன் விளைவாக அதிக எடை இழப்பு, அக்குள், தொடை, மற்றும் கழுத்து பகுதிகளில் உள்ள நிணநீர் சுரப்பிகள் பெருத்து காணப்படுவது. மூக்கு மற்றும் பல் ஈறுகளில் தேவையில்லாமல் அடிக்கடி இரத்தக் கசிவு ரத்த புற்று நோய் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

அடுத்து ஆண்களை விட பெண்கள் அதிக புற்று நோய்க்கு ஆளாகின்றனர். மார்பக புற்றுநோய் கருப்பை வாய் புற்றுநோய்.
மார்பக புற்றுநோயை பொறுத்தவரை மரபு ரீதியாகவும், பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாக சுரக்கும் பொழுதும் ஏற்படுகிறது. பெண்கள் அடிக்கடி மார்பகத்தை சுய பரிசோதனை செய்வது தேவையற்ற கட்டிகள் ஏதேனும் தென்படுகிறதா? காம்பில் ஏதேனும் நீர்க்கசிவு அல்லது ரத்தக்கசிவு இவை ஏற்பட்டால் மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

அடுத்து கருப்பை வாய் புற்றுநோய்
இது ஹியூமன் பாபிலோமா வைரஸ் மூலம் உருவாகிறது. இந்த புற்றுநோய் இருந்தால் அதிக ரத்தப்போக்கு உண்டாவது, அதிக வெள்ளைப்படுதல் மாதவிடாய் காலத்தை தவிர்த்து பிற நாட்களில் அதிக ரத்தப் போக்கு, அடிவயிற்றில் அதிக வலி இவை அனைத்துமே இந்த புற்றுநோயின் அறிகுறிகள்.

3. மலக்குடல் புற்றுநோய்
மலம் கழிக்கும் பழக்கங்களில் மாற்றங்கள், மலம் கழிக்கும் பொழுது ரத்தம் வெளியேறுதல், 4 அல்லது 5 நாட்களுக்கு மலம் வெளியாகாமல் இருப்பது, மலச்சிக்கல் தொடர் வயிற்றுப்போக்கு இவை அனைத்துமே மலக்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்.

4. மூளை புற்றுநோய்
காலை எழுந்தவுடன் வாந்தி, அடிக்கடி மயக்கம், தலைவலி திடீரென ஏற்படும் வலிப்பு, அனைத்தும் மூளையில் புற்றுக்கட்டி இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

5. குறுகிய நாட்களில் கழுத்தில் பெரிய கட்டி உருவாவது, உணவு மற்றும் தண்ணீர் விழுங்கும் பொழுது அதிக வலியை உணர்வது, குரல் கனத்து சத்தம் வேறுபடுவது, கழுத்தில் உள்ள நிணநீர் சுரப்பி பெருத்து காணப்படுவது, இவை அனைத்தும் தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

இந்த அறிகுறிகள் பிற நோய்கள் இருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எதற்கும் அருகில் உள்ள மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொள்வது நல்லது.