கொரோனா போரில் ஊர்க்காவல் படையை மலர்தூவி ரூபாய் மாலையிட்டு வரவேற்க்கும் மக்கள்(வீடியோ)!

0
199

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நாடு முழுவதும் சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் நபா என்ற ஊரில் துப்புரவு ஊழியர்கள் மக்கள் வசிக்கும் பகுதியில் சுகாதார வேலைகளை செய்து செல்கின்றனர். அப்போது இந்த பகுதி மக்கள் மலர்தூவி வரவேற்கின்றனர், பின்னர் சில இளைஞர்கள் அந்த ஊழியருக்கு ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை அணிவித்து நன்றி தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வை அங்கிருந்த யாரோ மொபைலில் வீடியோவாக எடுத்துள்ளனர், அதனை பஞ்சாப் முதல்வர் நரேந்திர சிங் ட்விட்டரில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.

Previous articleவாகனத்தை நிறுத்தியதால் பெண் போலீஸை பழிவாங்கிய ஸ்டேட் பாங்க் மேலாளர்!
Next articleநாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க கூடாது! -மத்திய மின்துறை அமைச்சகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here