பெட்ரோல் டீசல் விலை! நிம்மதியில் வாகன ஓட்டிகள்

Photo of author

By Sakthi

பெட்ரோல் டீசல் விலை! நிம்மதியில் வாகன ஓட்டிகள்

Sakthi

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து தான் இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. தற்சமயம் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் விலை 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் தொடர்ச்சியாக இருபத்தி இரண்டாவது நாளாக இன்றும் அதே விலையில் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.