பி.எஃப் (Provident Fund) தொகை தொடர்பான புதிய விதிகள் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் சேமிப்புகளை அதிகரிக்கும் மற்றும் ஓய்வூதிய காலத்துக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும்.
பி.எஃப் பணத்தை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பிஎஃப் பணம் பெறுவதற்கான செயல்முறை சில நாட்கள் எடுக்கும் நிலையில், தற்போது மின்னணு முறைகள் மூலம் விரைவாக பணம் பெற்றிடும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய முறையில், பணம் நேரடியாக வங்கி கணக்கில் மாற்றப்படுகின்றது, இது ஊழியர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
மேலும், மாதந்தோறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் தொகை குறிக்கப்பட்டு, நிறுவனங்களும் அதில் பங்களிப்பை செய்யின்றன. இந்த தொகை ஊழியர்களின் ஓய்வுக்கு பின் எதிர்கால தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. பி.எஃப் கணக்கு ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒரு முக்கிய சேமிப்பு முறையாக செயல்படுகிறது.
பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுக்கும் போது, குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் வரி பிடித்தம் (TDS) செய்யப்படும். தற்போது, 24 சதவீதம் வரை பணம் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது, குறிப்பாக பிஎஃப் கணக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பணத்தை எடுக்கும் போது அமலாகிறது. வட்டி தொகை மற்றும் முதலீட்டு வருமானத்தில் இந்த வரி பிடித்தம் இடம் பெறும். இது வரி விதிக்கும் விதிகளின் அடிப்படையில் இருக்கும், மேலும் கூடுதல் விவரங்களை EPFO அலுவலகம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறியலாம்.