பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. இவை அனைத்தும் மாயமாக இந்த தூபம் போடுங்கள்..!

0
138
#image_title

பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. இவை அனைத்தும் மாயமாக இந்த தூபம் போடுங்கள்..!

நமக்கு கெடுதல் ஏற்பட வேண்டும் என்று நினைக்கும் நபர்களால் வைக்கப்படும் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி உள்ளிட்ட கெட்ட சக்திகளை அடியோடு அழிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த பொருட்களை கொண்டு தூபம் போடுங்கள்.

தூபம் போட தேவைப்படும் பொருட்கள்:-

1)வெண் கடுகு
2)உப்பு
3)நொச்சி சமூலப்பொடி
4)தேவதாறு
5)அருகம்புல்
6)நாய்க்கடுகு
7)சாம்பிராணி

தூபம் போடும் முறை….

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெண் கடுகு, ஒரு தேக்கரண்டி நாய்க்கடுகு போட்டுக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கைப்பிடி அளவு அருகம்புல், ஒரு தேக்கரண்டி நொச்சி சமூலப்பொடி, ஒரு தேக்கரண்டி கல் உப்பு, சிறிது தேவதாறு மற்றும் சாம்பிராணி போட்டு கலந்து கொள்ளவும்.

வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் இதை கொண்டு தூபம் போட்டால் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி ஆகிய அனைத்தும் மாயமாகிவிடும்.

வாரம் இருமுறை இந்த தூபம் போட்டு வந்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கும். தொடர்ந்து 48 நாட்களுக்கு தூபம் போட்டால் தங்களை சுற்றி உள்ள அனைத்து கெட்ட சக்திகளும் விலகும்.