விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்!

0
73
PM Kisan 11th installment for farmers! Important information of the District Collector!
PM Kisan 11th installment for farmers! Important information of the District Collector!
விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்!
தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2,000 வீதம், வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணைத் தொகைகளாக  ரூ.6000 வரைப் பெற்றுள்ளனர்.
தற்போது 12- வது தவணைத் தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தற்போது திட்டப் பயனாளிகளின் நில ஆவணங்கள், தமிழ்நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. எனவே இத்திட்டத்தில் நிதியுதவி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களை (பட்டா) அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காண்பித்து, சரி செய்து கொண்டால் மட்டுமே அடுத்த தவணைத் தொகை கிடைக்கப்பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே, தகுதியான விவசாயிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து நில ஆவணங்களை சரிசெய்து கொள்ள வேண்டும்.இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால், தகுதியான விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவும், PM-KISAN வலைதளத்தில் e-KYC -ஐ பதிவேற்றம் செய்திடுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.