State

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேல் காரணம் அல்ல, பிரதமர் மோடியே காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது

சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழக கோவில்களின் சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘பொன்.மாணிக்கவேல் முயற்சியால் ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது பிரதமர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

அரசு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் குறித்த வழக்கு வரும் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கஷ்டப்பட்டு சிலையை பொன் மாணிக்கவேல் மீட்டு கொண்டு வந்த நிலையில் இந்த மீட்புக்கு அவர் காரணம் இல்லை என்று அரசுத்தரப்பே கூறியுள்ளது அவரது தரப்பினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Leave a Comment