மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை!

0
139
#image_title

மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை

ஆந்திர மாநிலம் ஏலூரில் காதலிக்க மறுத்த பெண்ணை அறையில் அடைத்து சித்திரவதை செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியை அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். அவருடைய காதலை அந்த மாணவி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் பலத்த காயத்துடன் வீட்டுக்கு வந்த அந்த மாணவி தன்னை அணுதீப் ஒரு அறையில் அடைத்து வைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரை செய்ததாக பெற்றோரிடம் கூறினார். இதற்கான காரணம் பற்றி பெற்றோர் விசாரித்த போது அனுதீப் தன்னை ஒருதலையாக காதலித்ததாகவும்,காதலை ஏற்கும்படி அறையில் அடைத்து வைத்து வற்புறுத்தியதாகவும், மறுத்த காரணத்தால் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்ததாகவும் கூறினார்.

மாணவியை தற்போது ஏலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றிய பெற்றோர் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்று தலைமறைவாகி இருக்கும் அனுதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.

author avatar
Savitha