சக்கரம் இல்லாத வண்டியில் ஏறி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்: பொன் ராதாகிருஷ்ணன்

0
158

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பணிபுரியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் நிறுவனம் பணிபுரிய உள்ளது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியபோது பிரசாந்த் கிஷோர் உடனான திமுகவின் உறவு என்பது சக்கரம் இல்லாத வண்டியை போன்றது என்றும் திமுகவுடனான உறவை பிரசாந்த் கிஷோர் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்

மேலும் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கக்கூடிய தேர்தல் என்றும் கூறிய அவர், நெய்வேலியில் பாஜக நடத்திய போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டம் அல்ல என்றும் அங்கு எந்த படப்பிடிப்புக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று நடந்த ஒரு பொதுவான போராட்டம் என்றும் தெரிவித்தார்

Previous articleவேனிலும் ரசிகர்களின் மனதிலும் ஏறிய விஜய்!
Next articleவங்கதேசத்திடம் உலகக்கோப்பையை பறிகொடுத்த இந்தியா:ரசிகர்கள் சோகம்!