பொன்னியின் செல்வன் ‘விக்ரம்’ பட சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி… கமல் பெருந்தன்மை!

0
95

பொன்னியின் செல்வன் ‘விக்ரம்’ பட சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி… கமல் பெருந்தன்மை!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க விரும்பியவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்.

பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களும், தமிழ் வெகுஜன இலக்கிய வாசகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தை பலமுறை தொடங்க பல இயக்குனர்கள் முயன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் வெளியாகி வெற்றிகரமாக முதல் வார இறுதியைக் கடந்துள்ளது. இந்நிலையில் இந்த 3 நாட்களில் 200 கோடி ரூபாயை தாண்டி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது பொன்னியின் செல்வன். தமிழகத்தைப் போல மற்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த வசூல் தொகை சற்று ஆச்சர்யமளிப்பதாகவும் உள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று இந்த படத்தை கமல்ஹாசன் படக்குழுவினருடன் இணைந்து பார்த்தார். படம் பார்த்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் “பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்திருப்பது சந்தோஷம். அதைக் கொண்டாடவே நான் இங்கு வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கியுள்ளது” எனக் கூறியுள்ளார்.