பிரசவித்த பெண்கள் உணவுக்கு முன் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும்!!

0
80

பிரசவித்த பெண்கள் உணவுக்கு முன் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும்!!

சுகப்பிரசவம் பெட் ஷாப் பெண்களாக இருந்தாலும் சரி அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்குமே உடல் ரீதியாக குழந்தை பேருக்கு பிறகு பல பிரச்சனைகள் உண்டாகும். மேலும் இவர்கள் குழந்தையை வெளிக்கொண்டு வந்ததால் இவர்கள் உடம்பில் உள்ள சத்துக்கள் குறைந்து இருக்கும். அதனை அதிகரிக்கும் வகையில் உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அவற்றில் அதிக பலன் தரும் உணவு பொருட்களில் ஒன்றுதான் பாதாம் பருப்பு. இந்த பாதாம் பருப்பை குழந்தை பெற்று எடுத்த பெண்கள் ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. காலை உணவுக்கு முன் 5 பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரண்டாவதாக குழந்தை பெற்றெடுத்தவர்கள் தவிர்க்க கூடாத உணவு வெந்தயம். ஏனென்றால் வெந்தயத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பிரசவித்த பெண்கள் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பு சத்தை சமநிலைப்படுத்தும். அதோட இதயத்துடிப்பை சீராக்கவும் இந்த வெந்தயம் உதவுகிறது. மேலும் பிரசவித்த பெண்கள் பலருக்கும் தாய்ப்பால் சுரப்பது குறைவாகவே இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.