மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

0
79

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் பொருட்களிலேயே மருந்துகள் உள்ளது. அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

மஞ்சள் :சமையலறையில் மஞ்சள் இல்லாத உணவே கிடையாது எந்த பொருட்களில் வேண்டுமானாலும் சிறிதளவு மஞ்சள் சேர்ப்பது மிகவும் சிறந்தது. இவை கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. வாயு, பெருங்குடல், பல்வலி, மார்பு வலி மற்றும் மாதவிடாய் சிரமங்கள் போன்றவர்களுக்கு மஞ்சள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றது .

உடலில் எந்த பகுதியில் காயம் ஏற்பட்டாலும் மஞ்சளை பயன்படுத்தினால் அவை விரைவில் குணமாகும். இதை இதய நோய் வராமலும் நம் உடலை பாதுகாக்கின்றது.

பூண்டு:இவை உணவில் சுவையை கூட்ட பயன்படுத்தப்படுகின்றது. பூண்டு பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. உயர் ரத்த அழுத்தம் இருதய நோயில் இருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகிறது. நம் சமையல் அறையில் அதிகமாக பயன்படுத்தும் பொருட்களில் பூண்டு ஒன்றாக உள்ளது.

இஞ்சி:ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க இஞ்சி மிகவும் பயன்படுகிறது. இஞ்சி நோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளது இதயத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய ஆக்சிஜன் அழுத்தத்தை குறைக்கவும் இஞ்சி பயன்படுகிறது. மேலும் இஞ்சி கொழுப்பின் அளவை குறைக்கவும் ,கல்லீரின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கவும் சளி காய்ச்சல் போன்ற நோய்களை குணமாகவும் பெரிதும் பயன்படுகிறது.

கருப்பு மிளகு: கருப்பு மிளகு என்பது ஆக்சிஜனேற்றம் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பூஸ்டர் மற்றும் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. இவை மாரடைப்பு வருவதை தடுக்கவும் பயன்படுகிறது.

கொத்தமல்லி: கொத்தமல்லி என்பது கொழுப்பின் அளவை குறைக்கவும் எச் டி எல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

author avatar
Parthipan K