முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!!

0
129

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வீட்டில் நடந்த சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து இருக்கின்றது.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரில், தனது பணி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்ந்து உள்ளது சம்பந்தமாக அவர்கள் மீது கடந்த 21-ம் தேதி கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து மேற்படி வழக்கு தொடர்பாக அவரது உறவினர்கள் மற்றும் அவரது பங்குதாரராக உள்ள நிறுவனங்கள். அதனை தொடர்ந்து அவர்களுக்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களிடம் உள்ள மொத்தம் இருபத்து ஆறு இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் பணம் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யப்பட்ட முதலீடுகள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

author avatar
Jayachithra