பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்?- அன்புமணி ராமதாஸ்

0
236

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைமை தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு எதிராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது!

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்.

இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தனது கருத்தை திண்டுக்கல் லியோனிக்கு எதிராக தெரிவித்துள்ளார்.

Previous articleமக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள், திமுகவிற்கு ஓட்டம்!
Next articleஅடடா!! இப்போ இவங்க தான் ட்ரெண்டா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here