ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் பி.எம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமனம்

0
84
Ratan Tata, others join as trustees of PM CARES Fund
Ratan Tata, others join as trustees of PM CARES Fund

ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் பி.எம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமனம்

கொரோனா பெருந்தொற்றின் போது அதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வந்தன. இந்நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மக்களுக்கு உதவும் வகையிலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார்.

இதையடுத்து பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிதியத்திற்கு நன்கொடைகள் அளித்து வருகிறார்கள்.

இந்த நிதியின் மூலம் நாட்டில் பல தரப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரமதர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பி.எம். கேர்ஸ் அறங்காவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முழுமனதுடன் பங்களிப்பு செய்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த இந்த பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முன்டா மற்றும் தொழிலதிபர் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் பிஎம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் மோடி பேசும் போது, புதிய அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களின் பங்களிப்பு பி எம் கேர்ஸ் நிதியின் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.