Breaking News

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Re-election in Coimbatore district.. High Court action order!!

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. இதன் இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பலரின் பெயரானது வாக்கு பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிகப்படியோரின் பெயரானது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த சுந்தர கண்ணன் என்பவரின் பெயரும் அவரது மனைவியின் பெயரும் நீக்கம் செய்யப்பட்டுள்து.அதே முகவரியில் இருக்கும் அவரது மகள் பெயர் மட்டும் பட்டியலில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேற்கொண்டு தேர்தல் முடிவை தடை செய்து மீண்டும் தேர்தல் நடத்தி வாக்களிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்த நிலையில் நீதிபதி கூறியதாவது, தேர்தல் முடிவடைந்த பிறகு எந்த ஒரு முடிவும் எடுக்க இயலாது.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை மீண்டும் வாக்களிக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.இறுதி வாக்காளர் பட்டியலானது ஜனவரி மாதமே வெளியான நிலையில் அச்சமயமே நீங்கள் இது தொடர்பாக புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் புகார் அளிக்கவில்லை அப்பொழுது என்ன செய்தீர்கள்?? என்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வாக்காளர் பட்டியலில் பெயரில்லா காரணத்தினால் தேர்தல் முடிவை தடை செய்ய முடியாது என்றும் மேலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் என கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.