இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வா?? அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்த அப்டேட்!! 

0
37

இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வா?? அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்த அப்டேட்!! 

அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் உள்ள டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து இரண்டு முன்னணி வீரர்கள் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியானது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த வேளையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த தகவலில் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ஆகிய இரண்டு வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதிகமான பணிச்சுமையின் காரணமாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

அடுத்ததாக நடைபெற உள்ள ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் ஹர்திக் பாண்டியா இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதேபோல் சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா நிலைமை குறித்து தெரிந்த பின்னர் அணியின் தேர்வு அமையும். மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா தான் துணை கேப்டனாக செயல்பட உள்ளார் என்பதையும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறியுள்ளன.