பூவிற்கும் பெண்மணி வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்?

Photo of author

By CineDesk

பூவிற்கும் பெண்மணி வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்?

CineDesk

கர்நாடக மாநிலத்திலுள்ள ராகியம்மாள் என்ற பூவிற்கும் பெண்மணியின் வங்கி கணக்கில் திடீரென 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் ராகியம்மாள் வங்கிக்கணக்கில் திடீரென ரூ.30 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் வங்கி அதிகாரிகள் அந்த பெண்ணை அழைத்து உங்களுடைய கணக்கில் 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் எப்படி வந்தது என்றும் கேட்டுள்ளார்கள்

இதனால் அதிர்ச்சி அடைந்த ராகியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் சேலை வாங்கியதாகவும் அந்த சேலைக்கு பரிசு விழுந்துள்ளது எனக்கூறி தங்களுடைய வங்கி கணக்கை ஒருவர் கேட்டு பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்

இதன் மூலம் அந்த பூ விற்கும் பெண்மணி வங்கி கணக்கை சிலர் தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் அவருடைய வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு வேறு சிலர் எடுக்க முயற்சித்ததையும் வங்கி அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது