வதந்தி என்பது ட்ரேட்மார்க்.. சினிமாவில் நுழைந்தால் இப்படித்தான்!! பத்திரிக்கையாளர்களை விலாசிய நடிகை!!

0
134

நடிகை பத்மப்ரியா மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமா துறைக்கு வந்தவர். எனினும் இவர் நடித்த சில படங்கள் குறிப்பாக தவமாய் தவமிருந்து, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பொக்கிஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா துறையில் திருமணத்திற்கு பின் ஓய்வு பெற்ற இவர் மீண்டும் சினிமாவில் நுழைந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை பத்மப்பிரியா பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது :-

 

தன்னுடைய சினிமா கேரியரில் நல்ல படங்களில் நடித்த இருப்பதாகவும் ஆனால் தான் மிகப்பெரிய ஆனால் தான் மிகப்பெரிய ஆனால் தான் ஒரு நல்ல டான்ஸர் என்றும் அதை நிரூபிப்பதற்கான கதைக்களம் தனக்கு இப்பொழுது வரை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பழசி ராஜா திரைப்படத்தில் களரி பாடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் இது போன்ற கதைகளை வைத்திருக்கக் கூடியவர்களுடன் பணியாற்ற தான் தயாராக இருப்பதாகவும் நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார்.

 

சினிமா துறையை பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றும் அந்த சினிமா துறையில் தற்பொழுது மிகவும் தாழ்வான நிலையில் தான் நான் இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சினிமா துறையில் எடுக்கப்படக்கூடிய படங்களில் கூட ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்றும் நான் விரும்புவது போல கதைக்களன்களை வைத்திருப்பவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் கதை படித்திருக்கும் பட்சத்தில் படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஊடகப் பத்திரிகையாளர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள் என்றும் எனக்கு திருமணம் ஆகிவிட்டது குழந்தை இருக்கிறது ஆனாலும் படம் நடிக்க வந்திருக்கிறேன் என்பது போல எப்படி வேண்டுமானாலும் அவர்கள் எழுதலாம் ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு எந்த விதமான கவலையும் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஇனி செந்தில் பாலாஜி எப்போதும் அமைச்சராக கூடாது.. ED போட்ட கண்டிஷன்!! நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!
Next articleநீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!! எங்கு எப்போது பதிவிறக்கம்.. முழு விவரம் இதோ!!