கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் ‘சலார்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

Photo of author

By Vinoth

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் ‘சலார்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

Vinoth

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் ‘சலார்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் எது என்றால் KGF இரண்டு பாகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸான கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டனர். படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் கேஜிஎஃப் போலவே ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் பற்றி பெரிதாக அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சில போஸ்டர்கள் மட்டுமே வெளியாகின. இந்நிலையில் இப்போது நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால் இந்த படத்தை பெரிய அளவில் நம்பியுள்ளார் பிரபாஸ்.