சேலம் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்ற மனைவியை காணவில்லை? கணவர் போலீசாரிடம் புகார்!

0
70
Salem district missing wife who went to father-in-law's house? Husband complained to the police!
Salem district missing wife who went to father-in-law's house? Husband complained to the police!

சேலம் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்ற மனைவியை காணவில்லை? கணவர் போலீசாரிடம் புகார்!

சேலம் மாவட்டம் வீரகனூர் சந்தைப்பேட்டையை பகுதியை  சேர்ந்தவர் ராமதாஸ். அவரது  மகள் பிரியங்கா (19). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கு தெரு  பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது.

மேலும்  இந்நிலையில்  கடந்த ஒன்பதாம் தேதி பிரியங்கா தனது கணவர்வுடன்  தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது  பிரியங்கா இரண்டு நாட்கள் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு வருவதாக கணவர் இளவரசனிடம் தெரிவித்துள்ளார். அதற்க்கு சம்மதம் சொன்ன இளவரசன் சொந்த ஊரான கச்சராபாளையம் சென்றுள்ளார்.

மேலும் இந்நிலையில் நேற்று மதியம் பிரியங்கா கணவர் வீட்டுக்கு செல்வதாக பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இரவு நேரம் ஆகியும் மகள் போன் செய்யாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் மகள் பிரியங்காவுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் பிரியங்கா ஃபோன் எடுக்காததால் மருமகன் இளவரசனுக்கு தொடர்பு கொண்டனர்.

அவரிடம் கேட்டபோது பிரியங்கா வீட்டுக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இளவரசன் மற்றும் அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் பிரியங்கா கிடைக்கவில்லை என்பதால் இளவரசன் வீரகனூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்காவை தேடி வருகின்றனர்.

author avatar
Parthipan K