27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சல்மான்கான் & ஷாருக் கான்…. ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் இந்தியிலா?

0
131

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சல்மான்கான் & ஷாருக் கான்…. ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் இந்தியிலா?

முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்வியால் அடுத்த படம் இயக்குவதில் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஆனால் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது இந்தியில் அமீர் கானை வைத்து இயக்கிய கஜினி படத்தின் இமாலய வெற்றிதான்.

அதன் பின்னர் விஜய்யோடு கூட்டணி அமைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களின் மூலம் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனரானார். ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆனது. விமர்சன ரீதியாகவும் கழுவி ஊற்றப்பட்டது. இதனால் அடுத்து அவர் இயக்க இருந்த விஜய் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்து வருகிறார். ஒரு அனிமேஷன் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்து அவர் சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக மூவரும் சந்தித்து விவாதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சல்மான் கானும் ஷாருக் கானும் கடைசியாக 1995 ஆம் ஆண்டு வெளியான கரண் அர்ஜுன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதன் பின்னர் சில படங்களில் கௌரவ வேடத்தில் தோன்றி நடித்துள்ளனர்.