திருமண தடை நீங்கி விரைவில் விரும்பிய வாழக்கை அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!!

0
35
#image_title

திருமண தடை நீங்கி விரைவில் விரும்பிய வாழக்கை அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!!

இன்றைய காலத்தில் திருமணம் நடைபெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.இதற்கு அதிக வயது,தோஷம்,வேலை இல்லாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கிறது.இதனால் 30 வயதை கடந்த பின்னும் பலருக்கும் திருமண யோகம் கூடி வராமல் இருக்கிறது.இந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சில வழிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

திருமண யோகம் கூடி வர ஒரு பரிகாரம் செய்ய வேண்டும்.இதற்கு முதலில் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து சிவன் பார்வதி ஒன்றாக இருக்கும் திருவுருவப் படத்தை வைக்க வேண்டும்.இந்த திருவுருவப்படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தில் பொட்டு வைக்க வேண்டும்.பின்னர் சிவன் பார்வதி படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி வைக்கவும்.

பின்னர் சிவன் பார்வதி படத்திற்கு முன் ஒரு மனையை போட்டு அமருங்கள்.மனை இல்லாத பட்சத்தில் ஒரு சுத்தமான காட்டன் துணியை போட்டு அமருங்கள்.அடுத்து ருத்ராட்ச மாலை அல்லது வேறு ஏதேனும் மாலை ஒன்றை கையில் எடுத்து கொள்ளுங்கள்.”காமேச பக்த மாங்கல்ய ஸுத்ர சோபித காந்தாரா” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.48 நாட்களுக்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.முதல் நாளில் எந்த நேரத்தில் பரிகாரம் செய்ய ஆரமித்திரீகளோ அதே நேரத்தில் தான் அடுத்த 47 நாட்களுக்கும் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தின் இறுதி நாளில் அதாவது 48வது நாளில் திருமணமான பெண்கள் 3 பேரை அழைத்து வெற்றிலை,பாக்கு தாம்பூலங்களை கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த பரிகார பூஜையை இதுவரை திருமணம் ஆகாத நபர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும்.அப்பொழுது தான் முழு பலன் கிடைக்கும்.