கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

0
143
Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022
Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் சில தினங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், விடாமல் பெய்துவரும் இந்த கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் கனமழை பெய்து வரும் மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,வேலூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.